யாழ். மயிலிட்டிட்டி துறைமுகத்துக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த கப்பலொன்றில் தீ பரவி வருகின்றது.
தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கடற்டையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று முற்பகல் மீண்டும் தீ பரவியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கிங்டம் என்றழைக்கபடும் இந்தக் கப்பலின் எஞ்சின் அறையில், தீ பரவியிருக்கலாம் என சந்தேகிப்படுகின்றது.
தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சரக்குக் கப்பலிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
இந்தக் கப்பல் கடந்த ஜனவரி மாதம் மயிலிட்டி துறைமுகத்தில் மணல் தட்டொன்றில் மோதியதையடுத்து கைவிடப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.