யாழில் துப்பாக்கிச் சூடு - விசாரணைகள் ஆரம்பம்

யாழ். தெல்லிப்பளை துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 18-06-2018 | 10:54 AM
யாழ். மல்லாகம் பகுதியில், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன. இரு தரப்பினருக்கிடையிலான ​மோதலைத் தடுக்கச்சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலீசார் தெரிவிக்கின்றனர். மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மல்லாகம் பகுதியில் மத வழிபாட்டு நிகழ்வொன்றின்போது நேற்று மாலை இரு தரப்பினருக்கிடையில் மோதல் ஏற்பட்டது . துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​ நீரில் மூழ்கிய ஒருவரின் சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரே இந்த மோதலைக் கட்டுப்படுத்த முயன்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தெடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

ஏனைய செய்திகள்