மயிலிட்டியில் கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

மயிலிட்டியில் கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது

by Bella Dalima 18-06-2018 | 9:12 PM
Colombo (News 1st)  யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்கு அருகில் கரைதட்டிய கப்பலொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்றிரவு (17) பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று முற்பகல் மீண்டும் தீ பரவியதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்த கப்பல் கடந்த ஜனவரி மாதம் மயிலிட்டி துறைமுகத்தில் கரைதட்டியதாக கடற்படையினர் தெரிவித்தனர். இதேவேளை, கப்பலில் தீ பரவியமை விசமச் செயலாக இருக்கலாம் என அதன் உரிமையாளர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார். உண்மையைக் கண்டறிவதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.