ஜப்பானில் நிலநடுக்கத்தால் மூவர் பலி

ஜப்பானில் நிலநடுக்கத்தால் மூவர் பலி

by Bella Dalima 18-06-2018 | 5:08 PM
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சிறுமி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் ஒசாகா நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளதோடு, சில கட்டடங்கள் இடிந்தும் வீழ்ந்துள்ளன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் கட்டடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் தங்கியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கி 9 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, 41 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜப்பானிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தினால் அங்கு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் ரயில் சேவையும் தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.