தொடரும் கேபிள் தொல்லை -மக்கள் விசனம்

தொடரும் கேபிள் தொல்லை -மக்கள் விசனம்

by Staff Writer 17-06-2018 | 9:40 PM
அனுமதியின்றி சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை உடனடியாக அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மின் கப்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புக்களால் உயிராபத்துக்கு மத்தியில் வாழ்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்ட கேபிள் இணைப்புக்கள் காரணமாக மின் யாழ்ப்பாணத்தில் இரு உயிரிழப்புக்கள் பதிவாகியது. அதனையடுத்து மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புக்களை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்தனர். இது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தததையடுத்து,மின் கம்பங்களில் கேபிள் வயர்களை பொருத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தன தெரிவித்தார். வவுனியா நகரில் பாதுகாப்பற்ற முறையில் மின்சார கம்பங்களில் கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ள காட்சிகளை காணக்கூடியாதகவுள்ளது. கேபிள் இணைப்புக்களுக்கான பூஸ்ரருக்கான மின்சாரம் மின் கம்பிகளிலிருந்து சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது.