ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போது பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கருத்து வௌியிட்டார்.
வடகொழும்பு துரித நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் புளூமென்டல் பொலிஸாரும் கொழும்பு மாநகர சபையினரும் இணைந்து சிரமதானமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் போது,அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கட்சிக்குள் பாரிய பிளவு உள்ளது. நம்பிக்ைக சீர்குலைக்கப்பட்டுளளது. இதனை சரியான தலைவரிடம் வழங்க வேண்டும். அதுவே தேவையாகவுள்ளது. மகிழ்ச்சிதரும் பதில்கள் தேவையில்லை. உண்மையான தலைமைத்துவத்தை வழஙக்ககூடியவாறு நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும், என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.