ஜனாதிபதியின் யானை தொடர்பான ஆணை - பொன்சேகா ஏற்பு !

ஜனாதிபதி மைத்திரியின் ஆணை - பொன்சேகா ஏற்பு !

by Staff Writer 17-06-2018 | 9:52 PM
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்திலுள்ள இரண்டு யானைகளையும் பிடிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ிங்கராஜ வனத்தை சூழவுள்ள கலவான, ரஜவத்த மற்றும் கொபிகெல்ல ஆகிய பகுதிகளில், கடந்த 15ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இன்று அதிகாலை வரை, யானையைப் பிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முறையான நடைமுறையூடாக இதுகுறித்து தீர்மானிக்கப்படும் வரை, சிங்கராஜ வனத்திலுள்ள இரு யானைகளையும் அங்கிருநது அகற்ற வேண்டாம் என, வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.