by Staff Writer 17-06-2018 | 5:17 PM
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான தினேஷ் சந்திமாலுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்க கோவையின்2.29 சரத்தை தினேஷ் சந்திமால் மீறியுள்ளதாகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மறுத்துள்ளார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.