கதிர்காமம் துப்பாக்கிச் சூடு - ஐவர் கைது

கதிர்காமம் துப்பாக்கிச் சூடு - ஐவர் கைது

by Staff Writer 17-06-2018 | 5:35 PM

கதிர்காமம், கிரிவிஹாரை விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் மேலும் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கதிர்காமம் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபர்கள் தம்வசம் வைத்திருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நேற்றிரவு மூவர் கைது செய்யப்பட்டனர். கொழும்பு பெபிலியான பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் தற்போது தீவிர விசாரணகைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மகசென் ஆலயத்தின் பூசகராக செயற்பட்ட 40 வயதான அசேல லக்மால் பண்டார உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 12 ஆம் திகதி இரவு 10.45 அளவில் கிரிவிகாரையின் விகாராதிபதியை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. இதன்போது விகாராதிபதி உள்ளிட்ட இரண்டு தேரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த விகாராதிபதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.