கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு சிறைத்தண்டனை

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 2 வருட சிறைத்தண்டனை

by Bella Dalima 16-06-2018 | 4:00 PM
நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரரான போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அந்நாட்டு அரசாங்கம் 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது. உரிய முறையில் வருமான வரி செலுத்தாததே அதற்கான காரணமாகும். ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தவிர 18.8 மில்லியன் யூரோக்களை போர்த்துக்கல் வரித் திணைக்களத்திற்கு ரொனால்டோ செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.