by Bella Dalima 16-06-2018 | 4:44 PM
பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தைப் பாதுகாப்பதற்காக அதனைச் சுற்றி புதிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன.
பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து ஈபிள் கோபுரத்தைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக 10.6 அடி உயரத்திற்கு இரும்பு வேலி மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
2015 முதல் பிரான்ஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 240-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.