கொட்டாஞ்சேனையில் வாகன போக்குவரத்தில் மாற்றம்

கொட்டாஞ்சேனையில் சில வீதிகளின் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

by Staff Writer 15-06-2018 | 3:23 PM
Colombo (News 1st)  கொட்டாஞ்சேனை - சிரில் பெரேரா மாவத்தை முதல் வாசல சந்தி வரையான பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள நீர்க்குழாய் திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இன்று இரவு 9 மணி முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 5 மணி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால், குறித்த காலப்பகுதிக்குள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் பிரகாரம், ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை, ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து அளுத்மாவத்தை ஊடாக முகத்துவாரம் வரையான பகுதி மற்றும் ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை, ஆமர் பாபர் சந்தி, ஜேதவன மாவத்தை ஊடாக கிராண்ட்பாஸ் வரையான பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்