காஷ்மீரில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

by Bella Dalima 15-06-2018 | 3:57 PM
காஷ்மீரில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரும் அவரது பாதுகாவலரும் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். Rising Kashmir சஞ்சிகையின் ஆசிரியரான சுஜாத் புஹாரியும் அவரது பாதுகாவலருமே ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்களால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே 2000 ஆம் ஆண்டு சுஜாத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அப்போது முதல் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் தமது வாகனத்திலிருந்து இறங்கும் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சம்பவத்தில் மற்றுமொரு பாதுகாவலரும் காயமடைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரமழான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை வேதனையளிப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறியுள்ளார்.