பசறையில் தீ விபத்தில் 3 பெண்கள் பலி

பசறையில் தீ விபத்தில் 3 பெண்கள் பலி

by Bella Dalima 14-06-2018 | 3:36 PM
Colombo (News 1st) பதுளை - பசறை நகரில் கடையொன்றில் பரவிய தீயில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த கடையில் தீ பரவியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடையின் பின்புறமாக அமைந்துள்ள அறையொன்றில் தங்கியிருந்த கடை உரிமையாளரின் தாய், மகள் மற்றும் உறவுமுறை பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். தீ விபத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். எனினும், தீ பரவிய கடையில் தற்போது அரச இராசாயன பகுப்பாய்வாளர்கள் தடயவியல் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.