தென் கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம் மூடல் 

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது

by Bella Dalima 14-06-2018 | 4:16 PM
Colombo (News 1st)  வைரஸ் தொற்று காரணமாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப பீடத்தின் பெரும்பாலான மாணவர்கள் தென் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடையே புதுவித வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார்  கூறினார். இந்த வைரஸ் ஏனைய மாணவர்களுக்கு பரவும் முன்னர் தொழில்நுட்ப பீடத்தை மூடுமாறு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதை அடுத்து குறித்த பீடம் கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டார். அதற்கமைய, பல்கலைக்கழக பொது சுகாதார பரிசோதகர்கள், விடுதி நிர்வாகக் குழுவினர் அனைவரும் இணைந்து மாணவர்களின் விடுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்