by Bella Dalima 14-06-2018 | 3:47 PM
Colombo (News 1st) தபால் ஊழியர்கள் நான்காவது நாளாக தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பகிஷ்கரிப்பு காரணமாக 13 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வை இதுவரையில் பெற்றுக்கொடுக்கவில்லை என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டார்.
ஆகவே, தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைகும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அவர் கூறியுள்ளார்.
சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கத்தினர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.