by Staff Writer 13-06-2018 | 4:26 PM
Colombo (News 1st) அக்கரப்பத்தனை - பெல்மொரல் தோட்டத்தில் பரவிய தீயினால் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
தீயினால் சுமார் 13 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட தொழிலாளர் குடியிருப்புத் தொடர் ஒன்றிலேயே இன்று முற்பகல் தீ பரவியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டனர்.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் பொதுமக்களும் அக்கரப்பத்தனைபொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.