by Staff Writer 11-06-2018 | 6:03 PM
இந்திய தலைநகர் புது டில்லியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் தேசிய குற்றவியல் ஆவணப் பணியகத்தின் புள்ளி விபரங்களின் படி சராசரியாக 2015 ஆம் ஆண்டளவில் சுமார் 15,000 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,அதனை தொடர்ந்து வந்த ஆண்டுகளில் குறித்த எண்ணிக்கை 67 சதவிகிதத்தால் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.