by Staff Writer 11-06-2018 | 3:56 PM
தொடங்கொட - துடுகல பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீயினால் ஆடை தொழிற்சாலை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
மதுகம களுத்துறை பிரதான வீதியின் தொடங்கொட பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் தீ பரவியதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
தீயினால் அருகிலிருந்த சில வர்த்தக நிலையங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.