by Staff Writer 10-06-2018 | 5:16 PM
மொனராகலையில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 முதல் 75 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.