by Staff Writer 10-06-2018 | 9:58 PM
சிரச ரிவியின் 20 ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் வகையில், இன்று விசேட மக்கள் சக்தி செயற்றிட்டமொன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட - பெபிலியவத்த சுனாமி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்த் திட்டம் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தில் வாழும் சுமார் 300 குடும்பங்கள் நீண்ட காலமாக சுத்தமான குடிநீரைப் பெறுவதில் இன்னல்களை எதிர்நோக்கினர்.
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நாளொன்றுக்கு அரை மணித்தியாலங்கள் வழங்கப்பட்ட குடிநீர் இவர்களுக்கு போதுமானதாக இருக்கவில்லை.
மக்கள் சக்தி திட்டமூடாக அமைக்கப்பட்டுள்ள இந்த குடிநீர்த்திட்டம், பெபிலியவத்த மக்களின் முகங்களில் பூரிப்பை ஏற்படுத்தும் வகையில் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.