சிங்கப்பூர் சென்றார் கிம் ஜோங் உன்

சிங்கப்பூர் சென்றார் கிம் ஜோங் உன்

by Staff Writer 10-06-2018 | 5:59 PM
 

அமெரிக்க ஜனாதிபதிடயுனான வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

கிம் ஜோங் உன், எயார் சைனா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் ஷங்காய் விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. வடகொரிய ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் நாளை மறுதினம் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது, இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க ஜனாதிபதியும் சிங்கப்பூரை நோக்கி பயணித்துள்ளார். இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையை முன்னிட்டு சிங்கப்பூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.