கரந்தெனிய பிரதேசசபை உபதலைவர் மீது துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் உயிரிழப்பு

by Bella Dalima 09-06-2018 | 3:29 PM
Colombo (News 1st) காலி - ஊருகஸ்மங்ஹந்தி - கோரகீன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு 10.15 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மற்றுமொருவர் கரந்தெனிய - பொரகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கரந்தெனிய பிரதேச சபை உப தலைவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊருகஸ்மங்ஹந்தி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.