மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்க தீர்மானம்

மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்க தீர்மானம்

by Bella Dalima 08-06-2018 | 6:22 PM
Colombo (News 1st)  எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மண்ணெண்ணெயின் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, 70 ரூபா முதல் 80 ரூபாவிற்கு மண்ணெண்ணெயை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு மறறும் திறைசேரி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடற்றொழிலார்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.