by Staff Writer 08-06-2018 | 4:11 PM
Colombo (News 1st)
மத்திய வங்கியின் முறிகள் விசாரணை அறிக்கையின் C-350 ஆவணத்தை பகிரங்கப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
எழுத்து மூலம் இந்த அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டார்.
இந்த அறிவித்தலின் பிரதியொன்று சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முறிகள் மோசடி விசாரணை அறிக்கை தொடர்பில் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க தமது திணைக்களம் தயாராகவுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டினார்.