by Staff Writer 08-06-2018 | 3:49 PM
Colombo (News 1st)
மத்தளை வரையான Flydubai விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தமது விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு Flydubai விமான சேவை கோரிக்கை விடுத்திருந்ததாக போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்.
மத்தளை வரையான தமது சேவை முன்னெடுக்கப்படும் தினங்களில், நாளொன்றுக்கு 13 தொடக்கம் 15 வரையான பயணிகள் மாத்திரமே உள்ளதாக Flydubai விமான சேவை அறிவித்துள்ளது.
இதனால் தமது நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்குவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மத்தளை வரையான Flydubai விமான சேவையின் போது 26 சந்தர்ப்பங்களில் விமானம் மீது பறவைகள் மோதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.