தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்த இளைஞர் பலி

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த கிளிநொச்சி இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 08-06-2018 | 9:00 PM
Colombo (News 1st)  கொழும்பு - தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்த கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாமரைக் கோபுரத்தின் 16 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்ததில் இந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கிளிநொச்சியை சேர்ந்த 19 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.