பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது

by Staff Writer 08-06-2018 | 3:36 PM
Colombo (News 1st)  இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் வண்டி விபத்திற்குள்ளானதில் அவர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேற்று முன்தினம் (06) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் மாத்திரம் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றமை குறிப்பிடத்தக்கது.