முறிகள் மோசடி: ஆவணங்களை வழங்குமாறு கோரிக்கை

முறிகள் மோசடி: ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் வழங்குமாறு சபாநாயகர் கோரிக்கை

by Bella Dalima 07-06-2018 | 4:11 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அனைத்து ஆவணங்களையும் பாராளுமன்றத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் வௌிநாட்டிற்கு சென்றுள்ளதால் அவர் நாடு திரும்பியதும், குறித்த ஆவணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்றத்திற்கு உள்ளும் வௌியிலும் வௌியிடப்படும் கருத்துக்கள் மற்றும் செய்திகள் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதைகள் என சபாநாயகர் கூறினார். எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்கவின் கேள்விக்கு பதில் வழங்கும் வகையில், சபாநாயகர் கரு ஜயசூரிய இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.