by Staff Writer 07-06-2018 | 5:07 PM
Colombo (News 1st)
மலேசிய விமானமொன்றில் குண்டொன்றை வெடிக்கச்செய்வதாக அச்சுறுத்திய இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கோலாலம்பூரில் இருந்து மெல்போர்ன் நோக்கி புறப்படவிருந்த MH128 ஜெட் விமானத்தின் கொக்பிட் கருவியை செயற்படுத்த முயன்றதாக தெரிவித்து கடந்த வருடம் மே மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் அவர் குண்டு வைத்திருக்கவில்லையென கண்டுப்பிடிக்கப்பட்டது.
26 வயதுடைய குறித்த இலங்கையர் போதைப்பொருளுக்கு அடிமையான மனநோயாளி எனவும் விசாரணைகளில் தெரியவந்தது.
அவுஸ்திரேலியாவில் விமானமொன்றை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயன்ற ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
12 வருட சிறைத்தண்டனை நிறைவில் அவர் நாடு கடத்தப்படுவார் என நீதிபதி அறிவித்துள்ளார்.