நிட்டம்புவ விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

நிட்டம்புவயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

by Staff Writer 07-06-2018 | 3:38 PM
Colombo (News 1st) கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் பஸ்கள் இரண்டு மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். கேகாலை மற்றும் மாவனெல்ல பகுதிகளைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதான இரண்டு இளைஞர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய இரண்டு தனியார் பஸ்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கண்டி கெட்டம்பே பகுதியில் வேன் ஒன்றில் மோதுண்டு பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், திருகோணமலை கல்லாறு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.