திருகோணமலை அலெக்ஸ்தோட்டத்தில் வாள்வெட்டு

திருகோணமலை அலெக்ஸ்தோட்டத்தில் வாள்வெட்டு

by Staff Writer 06-06-2018 | 12:33 PM
திருகோணமலை அலஸ்தோட்டத்தில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தேவநகர் மற்றும் திருக்கடலூர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவந்த முறுகல்நிலையை தொடர்ந்து நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கூடும் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்கானவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர்.