சர்ச்சைக்குரிய ஆவணம் சபாநாயகரிடம் கையளிப்பு

முறிகள் மோசடி - சர்ச்சைக்குரிய ஆவணம் சபாநாயகரிடம் கையளிப்பு

by Staff Writer 05-06-2018 | 11:25 AM
மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத சி 350 முதல் சி 360 வரையான பகுதிகள் ஜனாதிபதி செயலகத்தினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் விடுத்த கோரிக்கைகு அமைய, ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள் சிலர் இன்று குறித்த ஆவணங்களை கையளித்ததாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்த ஆவணங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படாமை குறித்த கடந்த சில நாட்களாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.