சட்டவிரோத சிகரெட்டுக்கள் சுங்கம் வசமானது

சட்டவிரோத சிகரெட்டுக்கள் சுங்கம் வசமானது

by Staff Writer 05-06-2018 | 4:38 PM
 

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இலங்கை பிரஜையொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 14 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, விமானங்களூடாக சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கொண்டு வரும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 6 இலட்சத்து 10 ஆயிரம் சிகரெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 30 இலட்சம் மில்லியன் ரூபாவெனவும் தெரிவிக்கப்படுகின்றது.