கிழக்கு ஆளுநரின் மனைவி பிணையில் விடுதலை

கிழக்கு ஆளுநரின் மனைவி பிணையில் விடுதலை

by Staff Writer 04-06-2018 | 3:03 PM

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் புதல்வி ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் புதல்வி ஆகியோர் இன்று சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இதன்போது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. பெண்ணொருவரை தாக்கியமை தொடர்பில் இருவரையும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.