by Staff Writer 04-06-2018 | 3:41 PM
சம்பளப் பிரச்சிணையை அடிப்படையாகக் கொண்டு இரண்டு முக்கிய தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
நாளை நள்ளிரவு வரை தமது பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
எனினும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தபால் தொழிற்சங்க ஒன்றியம் குறிப்பிடுகின்றது.
எனினும் ஏனைய தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதனால் இன்று தபாலகங்களின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை நீர் வழங்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்கமும் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.