by Staff Writer 03-06-2018 | 5:12 PM
காலி - கொழும்பு பிரதான வீதியில் சப்புகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை இன்று காலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஹபுருகல, பெந்தர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த பொலிஸ் அதிகாரி களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றியவராவார்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.