by Bella Dalima 02-06-2018 | 3:25 PM
Colombo (News 1st)
வௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுகின்றது.
சேற்று நீரினூடாக எலிக்காய்ச்சல் பரவுவதால், வௌ்ளம் ஏற்பட்ட இடங்களில் சேறு நிறைந்த பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறு தேசிய தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன குறிப்பிட்டார்.
குறிப்பாக, காயங்களுடன் சேறு நிறைந்த பகுதிகளில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் எலிக்காய்ச்சலால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியது.