ரயில்வே துறையை மேம்படுத்தத் திட்டம்

ரயில்வே துறையை மேம்படுத்த பாரிய அபிவிருத்தித் திட்டம்

by Bella Dalima 02-06-2018 | 3:41 PM
Colombo (News 1st)  ரயில்வே துறையை மேம்படுத்த அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. 12 எரிசக்தி கட்டுப்பாட்டுத் தொகுதிகளும், 108 புகையிரதப் பெட்டிகளும் விரைவில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. அத்துடன், ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.