மானிப்பாயில் வீட்டினுள் புகுந்து கொள்ளை

மானிப்பாயில் வீட்டினுள் புகுந்து கொள்ளை: உரிமையாளர் மீது தாக்குதல்

by Bella Dalima 02-06-2018 | 4:22 PM
Colombo (News 1st)  யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தங்காபரணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. வீட்டு உரிமையாளர் மீது பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். தாக்குதலுக்கு இலக்கான வீட்டு உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த எட்டரை பவுன் தங்க நகைகளையும் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் இரண்டையும் சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.