கொஸ்கமயில் பெண்கள் இருவர் கொலை

கொஸ்கமயில் பெண்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை

by Bella Dalima 02-06-2018 | 4:01 PM
Colombo (News 1st)  கொஸ்கம - வெரல்லமண்டிய பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர். 34 மற்றும் 78 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட 34 வயதான பெண், 15 நாட்களேயான குழந்தையின் தாய் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரும் உறவினர்கள் எனவும் வீட்டில் இருந்த போதே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் குறித்த பெண்களின் உறவினர் என்பதுடன், அவர் தலைமறைவாகியுள்ளார். கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.