பிரதான ரயில் மார்க்கத்தில் சடலம்

பிரதான ரயில் மார்க்கத்தில் சடலம்: ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது

by Bella Dalima 01-06-2018 | 4:17 PM
பிரதான ரயில் மார்க்கத்தில் சடலம்: ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. அம்பேபுஸ்ஸ - போத்தலே ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் சடலமொன்று காணப்பட்டதால், ரம்புக்கணையிலிருந்து மொரட்டுவை வரை பயணிக்கும் ரயில் காலை 5.45 முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரை மொரட்டுவை நோக்கி பயணிக்கும் ரயில் உட்பட 6 ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், அலுவலகத்திற்கு செல்வதற்கு தாமதமடைவதாக தெரிவித்த சிலர் அமைதியின்மையை தோற்றுவித்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததன் பின்னர் சடலம் அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் காலை 7.35 க்கு ரயில்கள் புறப்பட்டுள்ளன. ரயில் பாதையில் மீட்கப்பட்ட சடலம் மீது இன்று பிரேதப் பரிசோதனை இடம்பெறவுள்ளது. குருநாகலையை சேர்ந்த 34 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.