பாதாளக்குழு தலைவர்கள் இருவருக்கு சிவப்புஅறிவித்தல்

பாதாளக்குழு தலைவர்கள் இருவரைக் கைது செய்ய சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 01-06-2018 | 4:00 PM
Colombo (News 1st) பாதாளக்குழு தலைவர்களான மாகதுரே மதுஷ் மற்றும் கெசல்வத்தே தினுக்க ஆகியோரை கைது செய்வதற்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். மாகதுரே மதுஷ் மற்றும் கெசல்வத்தே தினுக்க ஆகியோர் துபாயில் தங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் குற்றச்செயல்கள் இடம்பெறுமாயின் அது குறித்து அறிவிப்பதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன... 0112 580 518 , 0112 500 741 , 0112 589 741.