பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Bella Dalima 01-06-2018 | 4:24 PM
Colombo (News 1st)  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன் ரூபா நிதி மூலம் கூரைத்தகடுகள் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.