by Bella Dalima 01-06-2018 | 5:26 PM
Colombo (News 1st)
சோளத்திற்கான நிர்ணய விலையை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் சோள உற்பத்தியில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உற்பத்தியை முறையாக விஸ்தரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முறையான வேலைத்திட்டத்தின் மூலம் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு, இலங்கையில் முதன்முறையாக சோளத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வருடாந்த சோளத்தின் கேள்வி 500 மெட்ரிக் தொன்களாகும்.
எனினும், உள்நாட்டில் 250 மெட்ரிக் தொன் சோளம் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றது.