by Bella Dalima 01-06-2018 | 4:33 PM
Colombo (News 1st)
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்படவுள்ளார்.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் இராஜினாமா தொடர்பில் அன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.
இதனையடுத்து, புதிய பிரதி சபாநாயகர் நியமிக்கப்படவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த திலங்க சுமதிபால உள்ளிட்ட 15 பேர் அரசாங்கத்திலிருந்து விலகினர்.
இந்நிலையில், பிரதி சபாநாயகர் பதவியிலிருந்தும் விலகுவதாக திலங்க சுமத்திபால அறிவித்துள்ளார்.