வட மாகாண கல்வி அமைச்சருக்கு TID அழைப்பு

தேசியக் கொடியேற்ற மறுப்பு: வட மாகாண கல்வி அமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு

by Bella Dalima 31-05-2018 | 8:11 PM
Colombo (News 1st)  பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதற்கமைய, வட மாகாண கல்வி அமைச்சர் ஜூன் மாதம் 5 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.