by Bella Dalima 31-05-2018 | 5:48 PM
Colombo (News 1st)
நாளை (01) இரவு 7 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு பேலியகொட உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, பேலியகொட, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா- எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், கம்பஹா பிரதேச சபை மற்றும் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கான நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.