அச்சுவேலியில் 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு

அச்சுவேலியில் 23 வருடங்களாக இராணுவம் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு

by Bella Dalima 31-05-2018 | 5:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. 23 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியே இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி கடந்த 1995 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டது. இதில் 6 குடும்பங்களுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்