மன்னாரில் மேலும் சில மனித எலும்புகள் மீட்பு

மன்னாரில் மேலும் சில மனித எலும்புகள் மீட்பு

by Bella Dalima 30-05-2018 | 8:11 PM
Colombo (News 1st)  மன்னார் சதொச கட்டட வளாகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளின் போது மேலும் சில எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் லங்கா சதொச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த இடத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னார் - எமில்நகர் பகுதி வீடு ஒன்றில் கொட்டப்பட்டபோது அதில் மனித எச்சங்கள் இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இச்சம்பவத்தை பொலிஸார் மன்னார் நீதவான் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். நீதவானின் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரியின் தலைமையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தில் பரவப்பட்ட மண்ணில் இருந்த சந்தேகத்திற்கிடமான எலும்புகள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதுடன், சதொச கட்டிட நிர்மாண வேலைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. இதற்கமைய, குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்றைய அகழ்வுப் பணிகளின் ​போதும் சில எலும்புகள் மீட்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.

ஏனைய செய்திகள்